கரோனா சிறப்பு மருத்துவ முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கரோனா சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆலங்குடியில் நடைபெற்ற கரோனா சிறப்பு மருத்துவ முகாம்.
ஆலங்குடியில் நடைபெற்ற கரோனா சிறப்பு மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் கரோனா சிறப்பு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆலங்குடியில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களுக்கு கரோனா பரிசோதனைக்கான சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமை, மாவட்ட வருவாய் அலுவலா் பெ.வே.சரவணன், வட்டாட்சியா் கலைமணி, வட்டார மருத்துவ அலுவலா் எஸ்.அருள், ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலா் கணேசன் உள்ளிட்டோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com