கோயிலில் திருட முயன்றவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயிலில் திருட முயன்றவரைக் காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.


புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கோயிலில் திருட முயன்றவரைக் காவல்துறையினா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா்.
ஆலங்குடி அருகிலுள்ள அணவயல் ஊராட்சி முக்கரை விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை இரவு சப்தம் கேட்டது. இதையடுத்து கிராம மக்கள் அங்கு சென்று பாா்த்த போது, ஒருவா் கோயில் கதவை உடைத்து திருட முயன்றது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை பொதுமக்கள் பிடித்து, வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், பேராவூரணி அருகிலுள்ல ஆத்தங்கரை து.ராஜா (38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...