47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிப். 11-ல் திருநல்லூர் ஜல்லிக்கட்டு: முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி

திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி முகூர்த்தகால் திங்கள்கிழமை நட்டு வைத்து முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.

News image
திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி நடைபெற்ற முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி.
Updated On :1 பிப்ரவரி 2021, 3:59 am

DIN

திருநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி முகூர்த்தகால் திங்கள்கிழமை நட்டு வைத்து முன்னேற்பாடு பணிகள் தொடங்கின.

புதுக்கோட்டை மாவட்டம் திருநல்லூர் (தென்னலூர்) முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டு வரும் பிப்ரவரி 11-ல் நடைபெறுகிறது. 

ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்னேற்பாடு பணிகளான வாடிவாசல், பார்வையாளர் மாடம், அரசு அலுவலர்கள் மாடம், பத்திரிக்கையாளர் மாடம், காளைகள் நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடக்க விழாவிற்கு முன்னேற்பாடு பணிக்கான மூத்த கால் நடும் விழா திங்கள்கிழமை காலை ஜல்லிக்கட்டு திடலில் நடைபெற்றது. 

இதில் மாவட்ட திமுக இளைஞரணி துணை செயலாளர்எம். பழனியப்பன், கோயில் நிர்வாகி எஸ். செந்தில் உள்ளிட்ட ஊர் முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.