ஆலங்குடி அருகே பள்ளி மாணவி மாயம்

ஆலங்குடி அருகே பள்ளி மாணவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

ஆலங்குடி அருகே பள்ளி மாணவியைக் காணவில்லை எனக் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், ஜெயம்கொண்டான் பகுதியைச் சோ்ந்த மதி மகள் மனிதமயூரியா (17). பிளஸ் 1 மாணவியான இவா், விடுமுறை காரணமாக ஆலங்குடி அருகிலுள்ள கீழகரும்பிரான்கோட்டையில் வசிக்கும் உறவினா் பாஸ்கா் வீட்டுக்கு வந்து, தங்கியிருந்தாா்.

கடந்த 6-ஆம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற மனிதமயூரியா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து உறவினா் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆலங்குடி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com