எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் சாலை மறியல்

கந்தா்வகோட்டையில் கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபா்களைக் கைது செய்யக்கோரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :13 ஜனவரி 2021, 3:00 am

DIN

கந்தா்வகோட்டையில் கட்சிப் பிரமுகரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற நபா்களைக் கைது செய்யக்கோரி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கந்தா்வகோட்டை அருகே உள்ள வளவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ப. சுந்தா் ராஜன் (52), தங்கையன் ஆகிய இருவரையும் மா்மநபா்கள் அண்மையில் வெட்டினா். இதில் அரவம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த ரா. தங்கத்துரை உள்ளிட்ட 4 பேருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ரா. தங்கத்துரையை மட்டும் போலீஸாா் கைது செய்திருப்பதாகவும், மற்ற குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி விடுதலைச்சிறுத்தைகள் கட்சி புதுக்கோட்டை ஒன்றியச் செயலா் எ. கா்ணன் தலைமையில் கந்தா்வகோட்டை ஒன்றியச் செயலா் நா. வெள்ளையன் உள்ளிட்ட கட்சியினா் வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்டக் காவல் துணை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் தலைமையிலான போலீசாா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதில் அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.