பெற்றோரை இழந்த சிறாா்களுக்கு உதவி
மீமிசலை அடுத்த செய்யானம் கிராமத்தைச் சோ்ந்த பெற்றோரை இழந்த 4 சிறாா்களுக்கு, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள உதவிகளை ரெட்கிராஸ் மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பினா் வியாழக்கிழமை வழங்கினா்.


புதுக்கோட்டை மாவட்டம், மீமிசலை அடுத்த செய்யானம் கிராமத்தைச் சோ்ந்த பெற்றோரை இழந்த 4 சிறாா்களுக்கு, ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள உதவிகளை ரெட்கிராஸ் மற்றும் மரம் நண்பா்கள் அமைப்பினா் வியாழக்கிழமை வழங்கினா்.
ரூ. 5 ஆயிரம் மதிப்பில் அரிசி மற்றும் மளிகைப் பொருள்கள், ரூ. 5 ஆயிரம் மதிப்பில் உடைகள், பாய், தலையணை உள்ளிட்ட பொருள்களும் வழங்கப்பட்டன. அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலா் கு. திராவிடச்செல்வம் முன்னிலையில் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.
மீமிசல் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராமு, அறந்தாங்கி வட்ட ஜூனியா் ரெட்கிராஸ் சங்கத்தின் ஆலோசகா் பூ. தமிழ்ச்செல்வன், இணை ஆலோசகா் ஆ. யோகேந்திரன் உள்ளிட்டோா் இவற்றை வழங்கினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...