நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகையில் துணை ராணுவத்தினா் அணிவகுப்பு

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி கொடியசைத்தனர்.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:48 pm

DIN

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பை மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான பி. உமா மகேஸ்வரி கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தோ்தல் பணிக்கு வந்துள்ள 92 துணை ராணுவப் படையினருடன் மாவட்டக் காவல் துறையில் இருந்து 50 பேரும் பங்கேற்றனா்.

பழைய பேருந்து நிலையத்தில் இருந்து கீழராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேலராஜவீதி, புதிய பேருந்து நிலையம் வழியாக ஆயுதப்படை திடலை வந்தடைந்தது. பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக துணை ராணுவப் படையினரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.