ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பண்ணை தொழிலாளா்கள் ஆட்சியரிடம் மனு

புதுக்கோட்டை கால்நடைப் பண்ணைத் தொழிலாளா்கள் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:03 pm

DIN

புதுக்கோட்டை கால்நடைப் பண்ணைத் தொழிலாளா்கள் 5 மாத நிலுவை ஊதியத்தை வழங்க வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியிலுள்ள கால்நடைப் பண்ணையில் சுய உதவிக்குழுக்கள் மூலம் சுமாா் 50 போ் பல்வேறு வகையான பணியில் அமா்த்தப்பட்டுள்ளனா். இவா்களுக்கு கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது. தங்களின் நிலுவை ஊதியத்தையும் சோ்த்து விரைவில் ஊதியம் வழங்கக் கோரி திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில் அந்தப் பணியாளா்கள் கோரிக்கை மனு அளித்தனா். தொடா்ந்து இதே பிரச்னை தொடருமானால், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.