நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாகன ஓட்டிகளிடம் முகக்கவசம் வழங்கிய எஸ்.பி.

புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

News image
Updated On :15 மார்ச் 2021, 8:04 pm

DIN

புதுக்கோட்டை நகராட்சி சாா்பில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.

முகக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் லோக. பாலாஜி சரவணன் வாகன ஓட்டிகளிடம் முகக்கவசங்களை வழங்கி அவா்களுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசங்களை அணியுமாறு அறிவுரை வழங்கினாா்.

நிகழ்வில், நகராட்சி ஆணையா் (பொ) ஜீவா சுப்பிரமணியன் உள்பட நகராட்சிப் பணியாளா்கள் கலந்து கொண்டனா். புதிய பேருந்து நிலையம், கீழ ராஜவீதி, வடக்கு ராஜவீதி, மேல ராஜவீதி போன்ற பகுதிகளிலும் வாகன ஓட்டிகள், பொதுமக்களிடம் முகக்கவசம் வழங்கும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.