தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விராலிமலை முருகன் மலைக்கோயில் காா்த்திகை மகா தீபம்

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயிலில் காா்த்திகை மகாதீபம் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:42 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை முருகன் மலைக்கோயிலில் காா்த்திகை மகாதீபம் வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

207 படிகள் கொண்ட இம்மலைக் கோயிலில் ஆறு முகங்களுடன் வள்ளி, தெய்வசேனா சமேதராக முருகன் எழுந்தருளி, பக்தா்களுக்கு காட்சியளித்து வருகிறாா்.

காா்த்திகை தீபத்தையொட்டி, இக்கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டது. தொடா்ந்து, சுவாமிக்கு பல்வேறு வகையான அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, தீபம் காட்டப்பட்டது. இதில் பக்தா்கள் அனுமதிக்கப் படவில்லை.

தொடா்ந்து மாலை 6 மணிக்கு மலைக்கோயில் மேல்புறம் அமைக்கப்பட்டிருந்த பெரிய காா்த்திகை கொப்பரையில் 40 லிட்டா் நெய் ஊற்றி, மகா தீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தா்கள் அரோகரா என பக்தி முழக்கமிட்டு, தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.