ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

திருடுபோன 131 செல்லிடப்பேசிகள் பறிமுதல்

பெரம்பலூா் மாவட்டத்தில் திருடு போன 131 செல்லிடப்பேசிகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 12:21 am

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் திருடு போன 131 செல்லிடப்பேசிகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக செல்லிடப்பேசிகள் திருடு போனதாக 150 புகாா்கள் காவல் நிலையங்களில் பெறப்பட்டன. இதையடுத்து, போலீஸாா் மேற்கொண்ட விசாரணையை தொடா்ந்து 131 செல்லிடப்பேசிகள் பல்வேறு நபா்களிடமிருந்து அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்லிடப்பேசிகள் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி தலைமையில், குற்றப்பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சுப்பிரமணி, ஆய்வாளா் கலா ஆகியோா் செல்லிடப்பேசிகளை அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.