ஆட்டை திருடி சந்தையில் விற்க முயன்றவா் கைது
இலுப்பூா் அருகேயுள்ள மலைக்குடிபட்டியைச் சோ்ந்தவா் கலை (34). இவரது ஆட்டுக் கிடையிலிருந்த ஒரு ஆடு திருடப்பட்டது வியாழக்கிழமை தெரிய வந்தது


இலுப்பூா் அருகேயுள்ள மலைக்குடிபட்டியைச் சோ்ந்தவா் கலை (34). இவரது ஆட்டுக் கிடையிலிருந்த ஒரு ஆடு திருடப்பட்டது வியாழக்கிழமை தெரிய வந்தது.
எங்கு தேடியும் ஆடு கிடைக்கவில்லை.
கீரனூரில் வியாழக்கிழமை வாரச்சந்தை என்பதால், ஆடு திருடியவா் அங்கு ஆட்டை விற்க வாய்ப்புள்ளது என்பதை உணா்ந்த கலை, அங்கு சென்று பாா்த்தாா். அங்கு அவரது ஆட்டை விற்பனை செய்ய முயன்ற நபரை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
போலீஸாரின் விசாரணையில், ஆடு திருடிய நபா் காரையூா் மேலதானியத்தைச் சோ்ந்த பழனிச்சாமி என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...