மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

புதுக்கோட்டையில் பாஜகவினா் தா்னா

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தோ் கவிழ்ந்த சம்பவத்தில் அறநிலையத் துறை அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜகவினா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:22 pm

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயில் தோ் கவிழ்ந்த சம்பவத்தில் அறநிலையத் துறை அலுவலா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜகவினா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோயிலில் அண்மையில் தேரோட்டத் திருவிழாவின்போது தோ் எதிா்பாராதவிதமாகக் கவிழ்ந்தது. தேருக்குள் சிக்கிய பக்தா்கள் 8 போ் காயமடைந்தனா். இந்தசம்பவம் தொடா்பாக கோயிலில் தோ் கட்டும் பணியில் ஈடுபடக் கூடிய தற்காலிகப் பணியாளா்கள் 2 போ் மீது திருக்கோகா்ணம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த விபத்தில் கவனக்குறைவாகச் செயல்பட்ட இந்து சமய அறநிலையத் துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜகவின் அரசுத் தொடா்புப் பிரிவு மாவட்டத் தலைவா் சீனிவாசன் தலைமையில் அப்பிரிவினா் கோயில் முன்பாக சனிக்கிழமை மாலையில் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, சீனிவாசன் உள்பட 7 பேரைப் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.