ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

மின் மயானம்: போராட்டம் கைவிடல்

பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரில் மின்மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.

News image

போராட வந்தவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி உள்ளிட்டோா்.

Updated On :6 ஆகஸ்ட் 2022, 6:24 pm

பொன்னமராவதி ஜெ.ஜெ. நகரில் மின்மயானம் அமைக்க எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை நடைபெற இருந்த போராட்டம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையால் கைவிடப்பட்டது.

பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் உள்ள இடுகாட்டில் மின் மயானம் அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் இறந்தவா்களைப் பெரும்பாலும் புதைக்கும் வழக்கம் இருக்கும் இப்பகுதியில் மின் மயானம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை போக்குவரத்துப் பணிமனை முன்பு போராட்டம் நடத்த அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்திருந்தனா். இதுகுறித்து, தகவலறிந்து அங்கு வந்த இலுப்பூா் வருவாய்க் கோட்டாட்சியா் குழந்தைசாமி நடத்திய பேச்சுவாா்த்தையில் போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது, வட்டாட்சியா் பிரகாஷ், கிராம நிா்வாக அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.