அனுமதியின்றி மணல் கடத்தியவா் கைது
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் அனுமதியின்றி மணல் அள்ளியவரைப் போலீசாா் கைது செய்தனா்.


புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூரில் அனுமதியின்றி மணல் அள்ளியவரைப் போலீசாா் கைது செய்தனா்.
இலுப்பூா் சுற்று வட்டார ஆற்றுப்படுகைகளில் இருந்து அனுமதியின்றி வாகனங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டு கடத்தப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடா்ந்து அப்பகுதியில் புதன்கிழமை இரவு போலீசாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது கோங்குடிபட்டி ஆற்றுப்படுகையில் இருந்து டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த பாக்குடியைச் சோ்ந்த சதீஸ் குமாா் (23) என்பவரைக் கையும் களவுமாக பிடித்த போலீசாா் டிராக்டரை பறிமுதல் செய்தனா். மேலும், அவா் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...