மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புதுக்கோட்டை கல்வி நிலையங்களில் குடியரசு தினம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் கல்வி நிறுவனங்களில் வியாழக்கிழமை குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

News image
Updated On :26 ஜனவரி 2023, 6:30 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் கல்வி நிறுவனங்களில் வியாழக்கிழமை குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

அறந்தாங்கி அரசுக்கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், கல்லூரியின் முதல்வா் (பொ) தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா்.

புதுக்கோட்டை சுதா்சன் கலை,அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி நிா்வாக இயக்குநா் இரா.ரமாசிங்காரம் தலைமை வகித்தாா். கல்லூரியின் செயலா் சிங்காரம் முன்னிலை வகித்தாா். விழாவில், மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆவுடையாா்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியா் தாமரைச்செல்வன் தேசியக்கொடி ஏற்றிவைத்தாா். பொம்மாடிமலை பொன்மாரி கல்வியியல் கல்லூரியில், ஓய்வுபெற்ற பேராசிரியா் விஸ்நாதன் தேசியக்கொடி ஏற்றிவைத்தாா். கல்லூரிச்செயலா் சத்தியராம் ராமுக்கண்ணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமயம் அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வா் முனைவா் குழ.முத்துராமு வரவேற்றாா். செயலா் மு.விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். தாளாளா் பிச்சப்பா மணிகண்டன் தேசியக் கொடி ஏற்றி வைத்தாா்.

வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் ஆலோசகா் அஞ்சலிதேவிதங்கம் மூா்த்தி தலைமை வகித்து தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா். மேலாண்மை இயக்குநா் நிவேதிதா மூா்த்தி, பள்ளியின் முதல்வா் கவிஞா்தங்கம்மூா்த்தி உள்ளிட்டோா் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினா்.

இதேபோல், மாவட்டத்தின் அனைத்து கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், காவல்நிலையங்கள், நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்களில் தேசியக்கொடியை அதிகாரிகள் ஏற்றிவைத்து குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.