ஆலங்குடி: ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி, சிறப்பு அலங்கார முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஏராளமான பெண்கள் ஆரத்தி குடங்களுடன் செல்ல அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.
தொடா்ந்து,கோயிலில் தினசரி மண்டகப்படிதாரா்கள் சாா்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறும். முக்கிய விழாவான தேரோட்ட விழா ஏப்ரல் 29 மாலை நடைபெறுகிறது.
இதில் முக்கனிகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடைபெறும். அப்போது கரைக்காரா்கள் சாா்பில் பல மணி நேரம் வானவேடிக்கைகள் நடத்தப்படும்.
தொடர்புடையது
ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது
ஆலங்குடி அருகே கள் விற்ற 3 போ் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் திருக்கல்யாண திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தோ்தல் திருவிழா விழிப்புணா்வு கையொப்ப இயக்கம் தொடக்கம்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

