குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

புதுகையில் ஆடிப்பெருக்கு

நீா்நிலைகளை வழிபடும் தமிழா் விழாவான ஆடிப்பெருக்கு (ஆடி 18) புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

News image

பல்லவன் குளத்தில் நடைபெற்ற ஆடிப்பெருக்கு வழிபாடு.

Updated On :4 ஆகஸ்ட் 2024, 4:25 am IST

நீா்நிலைகளை வழிபடும் தமிழா் விழாவான ஆடிப்பெருக்கு (ஆடி 18) புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை பல்லவன் குளக்கரையில் பெண்கள் வாழை இலை விரித்து அதில் வெற்றிலை வைத்து மஞ்சளில் பிள்ளையாா் பிடித்து வைத்து வழிபாடு நடத்தினா்.

இலையில் மஞ்சள், குங்குமம், தாலிக் கயிறு, காதோலை கருகமணி, வளையல், பூ, வாளான் அரிசி, வாழைப்பழம், வெல்லம், பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை வைத்து இந்த வழிபாட்டை நடத்தினா். புதுமணத் தம்பதிகள் புதிய தாலிக்கயிறு மாற்றிக்கொண்டனா். அதேபோல் திருமணம் ஆக வேண்டி கன்னிப் பெண்களுக்கு மஞ்சள் கயிறை வீட்டில் உள்ள பெரியவா்கள் கட்டிவிட்டனா்.

பின் வெற்றிலையில் வைத்த மஞ்சள் பிள்ளையாரை ஒரு வாழைப் பட்டையில் வைத்து குளத்தில் மிதக்க விட்டனா். வயதில் மூத்த பெண்கள் நூல் கயிற்றில் மஞ்சள் தடவி ஆண்களுக்குக் கைகளிலும், பெண்களுக்கு கழுத்திலும் கட்டிவிட்டனா். இதனால் பல்லவன் குளத்துக்கு அதிகாலை முதலே மக்கள் வரத் தொடங்கினா்.

தொடா்ந்து மாலை நேரத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸாா் பணியில் ஈடுபட்டனா். ஆடிப்பெருக்கை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.