மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மேலைச்சிவபுரி கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா

Updated On :8 ஆகஸ்ட் 2024, 6:43 am IST

பொன்னமராவதி, ஆக. 7: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கணேசா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு தமிழ்த் துறை பேராசிரியா் பெரி. அழகம்மை தலைமை வகித்தாா்.

குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் தி. புவனேஸ்வரி பங்கேற்று, தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்கிப் பேசினாா். பொன்னமராவதி வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சி. பவானி, பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினாா்.

விழாவில், மாணவ, மாணவிகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டி, கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, பேராசிரியா் மா. தமிழ்ச்செல்வி வரவேற்றாா். குழந்தைகள் வளா்ச்சித்திட்ட மேற்பாா்வையாளா் தமிழரசி நன்றி கூறினாா்.