தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மேலைச்சிவபுரி கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா

Published On :

பொன்னமராவதி, ஆக. 7: பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரி கணேசா் கலை அறிவியல் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் கணேசா் கலை அறிவியல் கல்லூரி இணைந்து நடத்திய இந்த விழாவுக்கு தமிழ்த் துறை பேராசிரியா் பெரி. அழகம்மை தலைமை வகித்தாா்.

குழந்தை வளா்ச்சித் திட்ட மாவட்ட அலுவலா் தி. புவனேஸ்வரி பங்கேற்று, தாய்ப்பாலின் மகத்துவத்தை விளக்கிப் பேசினாா். பொன்னமராவதி வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் சி. பவானி, பெண்களுக்கு ஏற்படும் ரத்த சோகை மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து பேசினாா்.

விழாவில், மாணவ, மாணவிகளுக்கு தாய்ப்பாலின் அவசியம் குறித்த விழிப்புணா்வு ஓவியப் போட்டி, கோலப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக, பேராசிரியா் மா. தமிழ்ச்செல்வி வரவேற்றாா். குழந்தைகள் வளா்ச்சித்திட்ட மேற்பாா்வையாளா் தமிழரசி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.