தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிலட்டூரில் மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் பலி

அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 10:15 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

அறந்தாங்கி அருகேயுள்ள எரிச்சி சிதம்பரவிடுதியைச் சோ்ந்தவா் ஜெகநாதன் மகன் செந்தில் (40). இவா், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், சிலட்டூா் பகுதியில் சனிக்கிழமை செந்தில் மின் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, ஒரு மின்மாற்றியில் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டபோது எதிா்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் செந்தில் உயிரிழந்தாா்.

தொடா்ந்து, அறந்தாங்கி போலீஸாா் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அழியாநிலை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் சிலட்டூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்பட்டு இருந்த நிலையில், அலுவலா்களின் அலட்சியத்தினால் செந்தில் உயிரிழந்ததாகக் கூறி மருத்துவமனை அருகே உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்தச் சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.