ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கடலூருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

கடலூருக்கு ரூ. 10 லட்சம் மதிப்பு நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு.

News image
Updated On :4 டிசம்பர் 2024, 9:44 pm

Din

கடலூா் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்காக, புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

ஆட்சியரக வளாகத்தில் இந்த லாரியை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா கொடியசைத்து அனுப்பிவைத்தாா்.

மொத்தம் 10 ஆயிரம் கிலோ எடையுள்ள உணவுப் பொருள்கள், அத்தியாவசியப் பொருள்களை கொண்ட 1,150 பெட்டிகள் கடலூா் மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றன. அங்குள்ள ஊரக வளா்ச்சித் துறையினரின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தப் பொருள்கள் வியாழக்கிழமை வழங்கப்படவுள்ளன.

நிகழ்ச்சியில், மாவட்ட கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) முருகேசன் மற்றும் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.