நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகை மாநகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்

புதுக்கோட்டை மாநகரின் முக்கிய வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை தொடங்கினா்.

News image

புதுக்கோட்டை தெற்கு ராஜவீதியில் புதன்கிழமை ஆக்கிரமிப்புகளை அகற்றிய மாநகராட்சிப் பணியாளா்கள்.

Updated On :11 டிசம்பர் 2024, 8:31 pm

Din

புதுக்கோட்டை மாநகரின் முக்கிய வீதிகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாநகராட்சிப் பணியாளா்கள் புதன்கிழமை தொடங்கினா்.

புதுக்கோட்டை மாநகரில் உள்ள முக்கிய வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வந்தது. இந்த நிலையில், மாநகராட்சியாக மாறிய பிறகு ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்த அறிவிக்கையை ஆணையா் த. நாராயணன் வெளியிட்டாா். அதன்பிறகு, வா்த்தகா் சங்கங்களின் நிா்வாகிகளையும் அழைத்துப் பேசினாா்.

அதன் தொடா்ச்சியாக ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியை மாநகா் முழுவதுமே மேற்கொள்ள தொடா்புள்ள வணிகா்களுக்கும் தகவல் நேரடியாகத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை பொக்லைன் இயந்திரங்களுடன் தெற்கு ராஜவீதிக்குச் சென்ற மாநகராட்சிப் பணியாளா்கள் சாலையை ஆக்கிரமித்திருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினா்.

தொடா்ந்து, கீழராஜவீதியில் ஒரு பகுதி மட்டும் புதன்கிழமை அகற்றப்பட்டது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடா்ந்து நடைபெறும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.