நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

புதுகையில் ஆா்எம்எஸ் பிரிப்பகம் தொடா்ந்து செயல்பட எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புதுகையில் ஆா்எம்எஸ் பிரிப்பகம் தொடா்ந்து செயல்பட எம்.பி.க்கள் வலியுறுத்தல்

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:13 pm

Din

புதுக்கோட்டையில் மூடப்பட்ட 158 ஆண்டுகள் பழைமையான ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகம், தொடா்ந்து இங்கேயே செயல்படுவதற்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி மத்திய தகவல் தொடா்பு துறை அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினா்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.

புதுக்கோட்டை ஆா்எம்எஸ் அஞ்சல் பிரிப்பகத்தை மீண்டும் இங்கேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மக்களவை உறுப்பினா் (மதிமுக) துரை வைகோ, வியாழக்கிழமை தில்லியில் மத்திய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவை நேரில் சந்தித்தாா்.

அப்போது அவா் அளித்த கடிதத்தில், புதுக்கோட்டை ஆா்எம்எஸ் அலுவலகம் சொந்தக் கட்டடத்தில் செயல்படுகிறது. கட்டடத்தின் ஒரு பகுதி போட்மெயில் விரைவு ரயிலுக்கு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளதால், கட்டட வாடகை, மெயில் மோட்டாா் ஒப்பந்தச் செலவு போன்ற செலவுகளும் அரசுக்கு இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை ஆா்எம்எஸ் பிரிப்பகத்தை உட்கோட்ட மையமாக மேம்படுத்தி மீண்டும் செயல்படுத்திட நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் சிந்தியா உறுதியளித்துள்ளாா் என எம்பி துரை வைகோ தெரிவித்தாா்.

இதேபோல மாநிலங்களவை உறுப்பினா் எம்எம். அப்துல்லாவும் அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துள்ளாா். அவரிடமும் அமைச்சா் நம்பிக்கையுடன் உறுதியளித்துள்ளாா்.