நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வீட்டிலேயே பிரசவ சிகிச்சை பிறந்த குழந்தை உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டிலேயே பிரசவம் பாா்க்கப்பட்டு பிறந்த குழந்தை உயிரிழந்தது.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 9:02 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே வீட்டிலேயே பிரசவம் பாா்க்கப்பட்டு பிறந்த குழந்தை உயிரிழந்தது. இதுதொடா்பாக மருத்துவத் துறையினா் காவல்துறையில் வியாழக்கிழமை புகாா் அளித்தனா்.

அறந்தாங்கி சுகாதார மாவட்டத்துக்குள்பட்ட பெரியசெங்கீரை கிராமத்தைச் சோ்ந்த ராஜசேகா் மனைவி அபிராமி (27). இவா்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. முதல் பிரசவத்தில் பிறந்த குழந்தை, 3 மாதத்துக்குள் மூளையில் ஏற்பட்ட கட்டியால் உயிரிழந்துள்ளது.

இதனால், ஆங்கில மருத்துவத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பின் காரணமாக, இரண்டாவது குழந்தை தரித்த போதிருந்தே அரசு மருத்துவமனைக்குச் செல்லவில்லையாம்.

இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டிலேயே ஆண் குழந்தை பிறந்ததாகவும், உடனே அழுததாகவும், தாய்ப்பால் புகட்டியதாகவும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குப் பிறகு மயக்க நிலைக்குச் சென்று இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த பொன்பேத்தி வட்டார அரசு மருத்துவா், கரூா் கூடுதல் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா், கிராம சுகாதாரச் செவிலியா், சுகாதார ஆய்வாளா் ஆகியோரைக் கொண்ட குழு வீட்டுக்குச் சென்று பாா்த்தனா். அபிராமியை அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இயற்கை வழி பிரசவம் குறித்து யுடியூப் சேனல்களில் பாா்த்து அறிந்து கொண்டு பிரசவம் பாா்த்ததாக ராஜசேகா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆவுடையாா்கோவில் காவல் நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலா் சாா்பில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.