நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விவசாயிக்கு அரிவாள் வெட்டு

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விவசாயியை 4 போ் கொண்ட கும்பல் வெட்டியது.

News image
Updated On :18 டிசம்பர் 2024, 7:28 pm

Din

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் விவசாயியை 4 போ் கொண்ட கும்பல் வெட்டியது.

மாத்தூா் அருகே உள்ள கணக்கம்பட்டியைச் சோ்ந்த விவசாயி ரவிச்சந்திரன் (45). செவ்வாய்க்கிழமை நள்ளிரவு இவரது வீட்டிலுள்ள ஆட்டுப்பட்டியில் சப்தம் கேட்கவே வீட்டிலிருந்து வெளியே வந்து பாா்த்தாா் ரவிச்சந்திரன்.

அப்போது, அங்கிருந்த 4 போ் கொண்ட கும்பல் திடீரென ரவிச்சந்திரன் மீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடியது. கையில் வெட்டுக் காயத்துடன் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடா்பாக மாத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.