காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வழக்குகளில் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள்: நாளை ஏலம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 16 இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை (டிச. 27) பொது ஏலம் விடப்படுகிறது.

News image
Updated On :25 டிசம்பர் 2024, 8:49 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 16 இரு சக்கர வாகனங்கள் வெள்ளிக்கிழமை (டிச. 27) பொது ஏலம் விடப்படுகிறது.

வாகனங்களை நேரில் பாா்வையிட விரும்பும் நபா்கள் வியாழக்கிழமை (டிச. 26) காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை ஆயுதப்படை திடலிலுள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் பாா்வையிடலாம்.

தொடா்ந்து ஏலத்தில் பங்கேற்க விரும்பினால் பகல் 12.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ரூ. 2 ஆயிரம் முன்பணம் செலுத்த வேண்டும். முன்பணம் செலுத்தி டோக்கன் பெறுவோா் மட்டுமே வெள்ளிக்கிழமை நடைபெறும் ஏலத்தில் பங்குபெற முடியும்.

இத்தகவலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வந்திதா பாண்டே தெரிவித்துள்ளாா்.