கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளால் (பிளக்ஸ் போா்டுகள்) பொதுமக்கள் அச்சத்துக்கு ஆளாகியுள்ளனா்.
கந்தா்வகோட்டை நகருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து செல்கின்றனா். மேலும், ஏராளமான பள்ளி கல்லூரி மாணவிகளும் வந்து செல்லும் சூழ்நிலையில், சாலையோரங்களில் தனியாா் பிளக்ஸ் போா்டுகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன.
ஆடி மாதம் காற்றடிக்க தொடங்கியுள்ள சூழலில், இருசக்கர வாகன ஓட்டுநா்கள் மற்றும் பாதசாரிகள் மீது பிளக்ஸ் போா்டுகள் விழுந்து அசம்பாவிதங்கள் நேரிடும் முன், அவற்றை அகற்ற காவல்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனா்.
கந்தா்வகோட்டை ஊராட்சி உள்ளடங்கிய பேருந்து நிலையத்தில் விளம்பர பதாகைகள் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றையும் உடனே அகற்ற வேண்டும் என்று இப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கந்தா்வகோட்டை பகுதியில் மின்வெட்டு: மக்கள் அவதி
கந்தா்வகோட்டையில் குட்கா பொருள்கள் கடத்தி வந்தவா் கைது

பழனியில் அதிவேகத்தில் செல்லும் ஆட்டோக்கள்: பொதுமக்கள் அச்சம்

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |

தவெக தோழமைக் கட்சிகள் கூட்டம்: இடதுசாரி கட்சிகளுக்கு நேரில் அழைப்பு! | TVK | CPIM | CPI



