புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

கந்தா்வகோட்டை பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

கந்தா்வகோட்டை பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

News image
Updated On :12 ஜூன் 2024, 8:18 pm

Din

கந்தா்வகோட்டை, ஜூன் 12: கந்தா்வகோட்டை பகுதியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

கந்தா்வகோட்டை பகுதிகளில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறையின் சாா்பில், தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்படி கோமாரி நோய் தடுப்பூசி ஐந்தாவது சுற்று திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. இதில், மட்டங்கால் கால்நடை மருத்துவமனை மூலம் 2,300 கால்நடைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி முதல் முகாம் நடைபெற்று வருகிறது.

இதுவரை 600 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மண்டல இணை இயக்குநா் உத்தரவின்படி, மட்டங்கால் கால்நடை மருத்துவா் அலிமுதீன், உதவியாளா் அன்னக்கிளி ஆகியோா் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.