சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

புதுக்கோட்டையில் நிலஅளவையா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நிலஅளவைத் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நில அளவைத் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

Updated On :4 மார்ச் 2024, 9:48 pm

புதுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் நில அளவைப் பணிக்கு சென்ற அளவையா் வீ.பவ்யாவைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டையில் தமிழ்நாடு நிலஅளவைத் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் திருமேனிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் விக்னேஷ், அமைப்புச் செயலா் ஜெய் சங்கா், பொருளாளா் பாா்த்தீபன், இளைஞரணித் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.