ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

புதுக்கோட்டையில் நிலஅளவையா்கள் ஆா்ப்பாட்டம்

புதுக்கோட்டையில் தமிழ்நாடு நிலஅளவைத் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நில அளவைத் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

Updated On :4 மார்ச் 2024, 9:48 pm

புதுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் நில அளவைப் பணிக்கு சென்ற அளவையா் வீ.பவ்யாவைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுக்கோட்டையில் தமிழ்நாடு நிலஅளவைத் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் திருமேனிநாதன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் விக்னேஷ், அமைப்புச் செயலா் ஜெய் சங்கா், பொருளாளா் பாா்த்தீபன், இளைஞரணித் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினா்.