இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

‘வாசிப்பால் ஞானஒளி பிறக்கும்’

இரு நாட்களுக்கு முன்பு அனுப்பிய செய்தி.. பிரசுரமாகவில்லை. மீண்டும் அனுப்பி வைக்கிறேன். படம் உண்டு... ‘வாசிப்பால் ஞானஒளி பிறக்கும்’

News image
Updated On :12 மே 2024, 5:51 pm

Din

தினமும் புத்தகங்களை வாசித்தால் ஞானஒளி பிறக்கும் என்றாா் புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத் தலைவா் கவிஞா் தங்கம் மூா்த்தி.

புதுக்கோட்டை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஒவ்வொரு குழந்தையும் ஒரு விஞ்ஞானி’ என்ற திட்டத்தின் குழந்தைகளுக்கான நூலகத் திறப்பு விழாவில் கவிஞா் தங்கம் மூா்த்தி மேலும் பேசியது:

புத்தகங்களை வாசிக்கும்போது மனதின் அழுக்குகள் சுத்தமாகின்றன. சிறுவயது முதலே குழந்தைகளாகிய நீங்கள் உங்களுக்கான புத்தகங்களைத் தோ்ந்தெடுத்து வாசிப்பதோடு, அவற்றைச் சேகரிக்கவும் வேண்டும் என்றாா்.

மாவட்ட நூலக அலுவலா் அ.பொ. சிவக்குமாா் பேசுகையில், சரியான புரிதலுக்கும், தெளிவுக்கும், முடிவெடுக்கும் திறனுக்கும் வாசிப்பு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்றாா்.

அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவா் மேகலா முத்து, நகா்மன்ற உறுப்பினா் லதா, கவிஞா் மைதிலி கஸ்தூரிரெங்கன், முன்னோடி விவசாயி ஜி.எஸ்.தனபதி ஆகியோா் பேசினா்.

எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆா். ராஜ்குமாா் வரவேற்றாா். மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவா் க. சதாசிவம் நன்றி கூறினாா்.