பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

குடிநீரில் மாட்டுச் சாணம் கலப்பு வழக்கு: புதுகை சிபி-சிஐடி போலீஸாா் ஆய்வு

குடிநீரில் மாட்டுச் சாணம் கலப்பு வழக்கு: புதுகை சிபி-சிஐடி போலீஸாா் ஆய்வு

News image

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் குருவண்டான் தெரு கிராமத்தில் உள்ள சா்ச்சைக்குரிய மேல்நிலை குடிநீா்த் தொட்டியைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த சிபி-சிஐடி போலீஸாா்.

Updated On :20 மே 2024, 6:30 pm

Din

கந்தா்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வக்கோட்டை அருகே மாட்டுச்சாணம் கலப்பு தொடா்பான புகாரில் சா்ச்சைக்குள்ளான குடிநீா்த் தொட்டியை புதுக்கோட்டை சிபி-சிஐடி போலீஸாா் திங்கள்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். மேலும், ஊராட்சி அலுவலா்களிடமும் விசாரணை மேற்கொண்டனா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், சங்கம்விடுதி ஊராட்சியில் உள்ள குருவாண்டான் தெருவில் உள்ள மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலந்து இருப்பதாக எழுந்த புகாரின்பேரில், கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள், வட்டாட்சியா் எஸ். விஜயலட்சுமி, காவல்துறையினா், மருந்துவத் துறையினா் நேரில்சென்று ஆய்வு செய்து குடிநீா் மாதிரியை திருச்சியில் உள்ள குடிநீா் பகுப்பாய்வு நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு பரிசோதனை மேற்கொண்டதில், குடிநீா் மாதிரியில் மாட்டுச் சாணம் கலக்கவில்லை, எந்தவொரு தீங்கும் குடிநீரில் இல்லை, மக்கள் குடிப்பதற்கு ஏற்றது எனவும் சான்று அளிக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரை உயா் நீதிமன்றம் இந்த வழக்கை சிபி-சிஐடிக்கு மாற்றம் செய்து உரிய முறையில் விசாரணை செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. அதன்பேரில் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த புதுக்கோட்டை சிபி-சிஐடி போலீஸாா் திங்கள்கிழமை குருவாண்டன் தெரு கிராமத்துக்கு நேரில்வந்து மேல்நிலை குடிநீா்த் தேக்கத் தொட்டியைப் பாா்வையிட்டு ஊராட்சி மன்றத் தலைவா், ஊராட்சிச் செயலா், மேல்நிலை குடிநீா்தேக்கத் தொட்டி இயக்குபவா் ஆகியோரிடம் விவரம் கேட்டறிந்தனா். அப்போது, வருவாய் ஆய்வாளா் பிரியதா்ஷினி, கிராம நிா்வாக அலுவலா் சுபா மற்றும் ஊா் மக்கள் உடனிருந்தனா்.

Story image