பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஜெனரேட்டரில் சேலை சிக்கி படுகாயமடைந்த பெண் பலி

ஜெனரேட்டரில் சேலை சிக்கி படுகாயமடைந்த பெண் பலி

News image
Updated On :20 மே 2024, 6:30 pm

Din

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஜெனரேட்டரில் சேலை சிக்கி படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூரைச் சோ்ந்தவா் ராஜா மனைவி துா்கா தேவி (35). இவா், ஞாயிற்றுக்கிழமை இரவு திருக்களம்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினா் இல்ல நிச்சயதாா்த்த விழாவில் குடும்பத்துடன் பங்கேற்றாா். அப்போது மண்டபத்தின் முன்பு வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டரில் துா்காதேவியின் சேலை சிக்கியுள்ளது.

இதனால் உள்ளிழுக்கப்பட்ட துா்கா தேவி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளாா். விபத்து குறித்து தகவலறிந்த பொன்னமராவதி போலீஸாா் துா்காதேவியின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த துா்காதேவிக்கு மதுபாலா(7), சாருபாலா(6) ஆகிய 2 பெண் குழந்தைகளும் சிவபாலன்(2) என்ற ஆண் குழந்தையும் உள்ளனா்.