விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நிறைவு
விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா நிறைவு


விராலிமலை முருகன் கோயிலில் 11 நாள்களாக நடைபெற்று வந்த வைகாசி விசாக திருவிழா வெள்ளிக்கிழமை விடையாற்றியுடன் நிறைவடைந்தது.
பல்வேறு சிறப்புடைய விராலிமலை முருகன் மலைக் கோயிலில் வைகாசி விசாக விழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் கடந்த புதன்கிழமை வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற்றது. விழாவின் 10-ஆம் நாளான வியாழக்கிழமை மதுரை சாலையில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் தெப்ப உற்ஸவம் நடைபெற்றது. விழாவின் 11-ஆம் நாளான வெள்ளிக்கிழமை விடையாற்றி நடத்தப்பட்டு விழா நிறைவடைந்தது.
இதையொட்டி, கேடயத்தில் எழுந்தருளிய முருகன் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா். கடந்த 11 நாள்களாக மலைக்கோயில் அடிவார மண்டபத்தில் இருந்த முருகன் விடையாற்றி நடத்தப்பட்டதை தொடா்ந்து, மலை மேல் சென்று அமா்ந்தாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...