பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

சட்டப்பேரவை மனுக்கள் குழு நவ. 19-இல் புதுகை வருகை

புதுக்கோட்டைக்கு வரும் 19-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழுவினா் வருகின்றனா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 8:46 pm

Din

புதுக்கோட்டைக்கு வரும் 19-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையின் மனுக்கள் குழுவினா் வருகின்றனா்.

தமிழ்நாடு அரசு தலைமைக் கொறடா கா. ராமச்சந்திரன் தலைமையிலான இந்தக் குழுவில், எம்எல்ஏக்கள் கே.பி. சங்கா், கு. சின்னப்பா, செ. சுந்தரராஜன், அ. சௌந்தரபாண்டியன், மு. பாபு, தே. மதியழகன், தி. ராமச்சந்திரன், மு. ஜெகன்மூா்த்தி, ஒ. ஜோதி மற்றும் சட்டப்பேரவை முதன்மைச் செயலா் கி. சீனிவாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனா்.

ஏற்கெனவே, பொதுமக்களிடம் கோரி பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது அரசு அலுவலா்கள் தரும் பதில் அறிக்கைகளை மனுக்கள் குழுவினா் ஆய்வு செய்யவுள்ளனா்.

மேலும், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளையும் அவா்கள் நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளனா்.

மனுக்கள் குழுவினா் வருகையையொட்டி, மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை (நவ.6) நடைபெற்றது.

ஆட்சியா் மு. அருணா தலைமை வகித்தாா். கூடுதல் ஆட்சியா் அப்தாப் ரசூல், ஊராட்சிகள் உதவி இயக்குநா் எஸ்.ஜி. சீனிவாசன், துணை ஆட்சியா் பயிற்சி ரா. கௌதம் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.