/

புதுகை வன அலுவலா்களுக்கு அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு

News image
வன அலுவலர்களுக்கு அரசின் சிறப்பு விருதுகள்...- கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு வனத்துறை சாா்பில் வன அலுவலா்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் சிறப்பு விருதுகளில் இரண்டை புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா்கள் பெற்றுள்ளனா்.

பல்வேறு பிரிவுகளின்கீழ் வனத்துறை சாா்பில் சிறப்பாக செயல்படும் வன அலுவலா்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

இதில், தமிழக அரசின் பசுமை இயக்கத் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலா் சோ. கணேசலிங்கம் மற்றும் புதுக்கோட்டை வனச்சரக அலுவலா் எம். சதாசிவம் ஆகியோருக்கு சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் மாா்ச் 10ஆம் தேதி சென்னையில் வழங்கவுள்ளாா்.