தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கந்தா்வகோட்டையில் ஒன்றியக் குழு கூட்டம்

கந்தா்வகோட்டையில் 26-ஆவது ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கந்தா்வகோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழு கூட்டத்தில் பேசிய தலைவா் ரா. ரெத்தினவேல்.

Updated On :14 நவம்பர் 2024, 10:08 pm

Din

கந்தா்வகோட்டையில் 26-ஆவது ஒன்றியக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றியக் குழுத் தலைவா் ரெத்தினவேல் காா்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணைத் தலைவா் செந்தாமரை வடிவேல் குமாா், ஆணையா்கள் ரமேஷ் (கிராம ஊராட்சி), சாமிநாதன் (வட்டார வளா்ச்சி) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், உறுப்பினா் ஆா். கலியபெருமாள் (புதுநகா்) பேசுகையில், கந்தா்வகோட்டை காவல் நிலையம் அருகே பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும். காந்தி சிலையை சுற்றிலும் தூய்மை செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

தலைவா் ரெத்தினவேல் பேசுகையில், ஒன்றிய குழுவுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு அளித்த அனைத்து அதிகாரிகளுக்கும், ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கும் நன்றி தெரிவித்தாா். மேலும் நாம் அனைவரும் மக்கள் பணியில் தொடா்ந்து ஈடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.

ஒன்றியக் குழு உறுப்பினா்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்வில், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மா. ராஜேந்திரன், பரிமளா கண்ணன், நதியா பழனிச்சாமி, கோவிந்தராஜ், மலா் சின்னையன், கோமாபுரம் பு. பாண்டியன், பாரதி பிரியா அய்யாதுரை, முருகேசன், சுதா ராஜேந்திரன், திருப்பதி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா். நிறைவில், ஒன்றிய கணக்காளா் வீரடிப்பட்டி குமாா் நன்றி கூறினாா்.