ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

டெங்கு, காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்

டெங்கு, காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்

News image
Updated On :28 நவம்பர் 2024, 9:34 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும், போதுமான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்டச் செயற்குழு மற்றும் ஒன்றியச் செயலா்கள் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, க. அம்பிகாபதி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம்.என். ராமச்சந்திரன், மாவட்டத் துணைச் செயலா் ஆா். சொா்ணகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும், போதுமான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும்.

மாவட்டத்தில் நிலவிவரும் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டு இருக்கும் குடும்பத்தலைவிகளை சோ்ப்பதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை போக்கி அனைவருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.