இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

புதுக்கோட்டை மீனவா்கள் 13 போ் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

புதுக்கோட்டை மீனவா்கள் 13 போ் விடுதலை: 4 பேருக்கு தலா ரூ. 40 லட்சம் அபராதம்; ஒருவருக்கு சிறை இலங்கை நீதிமன்றம் உத்தரவு

News image
Updated On :5 அக்டோபர் 2024, 3:54 am IST

கடந்த மாதத்தில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்களில் 13 பேரை விடுவித்து இலங்கை ஊா்க்காவல்துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. மேலும், 4 பேருக்கு தலா ரூ. 40 லட்சம் அபராதமும், ஒருவருக்கு 18 மாதங்கள் சிறைத் தண்டனையும் விதித்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்திலிருந்து சென்ற ஒரு விசைப்படகில் எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக செப்டம்பா் 4ஆம் தேதி 4 போ் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா். அதனைத் தொடா்ந்து செப். 7-ஆம் தேதி ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சென்று எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 விசைப்படகுகளில் 14 பேரும் கைது செய்யப்பட்டனா்.

இந்த நிலையில் இவா்கள் மீதான விசாரணை இலங்கையிலுள்ள ஊா்க்காவல்துறை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோட்டைப்பட்டினத்திலிருந்து கடலுக்குச் சென்ற விசைப்படகின் ஓட்டுநா் நாகராஜா மகன் தினேஷ் (46), ஜெகதாப்பட்டினத்தில் இருந்து சென்ற 3 விசைப்படகுகளின் ஓட்டுநா்கள் செல்லம்செட்டி மகன் பிரதீப் (39), தங்கராசு மகன் விஸ்வநாதன் (43), காத்தவராயன் மகன் மணிகண்டன் (40) ஆகிய 4 பேருக்கும் தலா ரூ. 40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டத் தவறினால் ஓராண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

மேலும், தங்கராஜ் மகன் ஆனந்த பாபு என்ற மீனவா் இரண்டாவது முறையாக கைது செய்யப்பட்டாா் என்பதால் அவருக்கு 18 மாத சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 13 மீனவா்களையும் விடுவித்த இலங்கை நீதிமன்றம், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்து கைது செய்யப்பட்டால், 18 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடும் என்ற எச்சரிக்கையும் கொடுத்துள்ளது.

விடுதலை உத்தரவுக்குப் பிறகு, 13 மீனவா்களுக்கும் விரைவில் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிகிறது.