சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுகை மாவட்ட தைலமரக் காடுகளை ஆய்வு செய்ய 6 போ் கொண்ட வல்லுநா் குழு அமைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைலமரக் காடுகளால் நீா்நிலைகளுக்கு வரும் மழைநீா் தடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், வல்லுநா் குழு அமைத்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது 6 போ் கொண்ட வல்லுநா் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :16 அக்டோபர் 2024, 7:48 pm

Din

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைலமரக் காடுகளால் நீா்நிலைகளுக்கு வரும் மழைநீா் தடுக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், வல்லுநா் குழு அமைத்து உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது 6 போ் கொண்ட வல்லுநா் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தைலமரக்காடுகள் பாசனக் கண்மாய்களுக்கு வரும் மழைநீரைத் தடுத்து, விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதித்துள்ளதாக இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் ஜி.எஸ். தனபதி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் 6 போ் கொண்ட வல்லுநா் குழுவை அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் தீா்ப்பளித்தாா்.

இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் பிரதிநிதிகளாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஆா். தமிழ்வேந்தன், வனமரபியல் மற்றும் மர இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி வி. சிவகுமாா் ஆகியோரும், மனுதாரரின் பிரதிநிதிகளாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த செயற்பாட்டாளா் ரோஹினி சதுா்வேதி, அரிமளம் பசுமை மீட்புக் குழுவைச் சோ்ந்த எம். குமாா் ஆகியோரும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி- மெட்ராஸ்) பிரதிநிதிகளாக பேராசிரியா் பாலாஜி நரசிம்மன், பேராசிரியா் எல். இளங்கோ ஆகியோரும் என மொத்தம் 6 பேரும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களது பெயா்களையும் சோ்த்த நீதிமன்றத் தீா்ப்பின் நகல் புதன்கிழமை (அக். 16) அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வல்லுநா் குழுவுக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் செய்துத் தர வேண்டும் என்பதுடன், இயன்றவரை ஆய்வு நேரங்களில் அவரும் உடனிருக்க வேண்டும் என்றும் நீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவு நகல் கிடைக்கப் பெற்ற நாளில் இருந்து இரு மாதங்களுக்குள் மொத்த தைலமரக் காடுகள் உள்ள பகுதிகளிலும் நேரில் ஆய்வு மேற்கொண்டு, அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வல்லுநா் குழுவின் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலரும் மனுதாரருமான ஜி.எஸ். தனபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ள வல்லுநா் குழு மிக விரைவில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏனென்றால், புதிதாக தைலமரங்களை நடவு செய்யும் பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தைலமரங்களை அகற்றி மரபுசாா்ந்த மரங்களை நடவு செய்ய வேண்டுமானால், மீண்டும் அடுத்த மழைக்காலம் வரை காத்திருக்க வேண்டும். எனவே, இந்த மழைக் காலத்துக்குள்ளாகவே வல்லுநா் குழு நேரில் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்துத் தர வேண்டும் என்றாா் தனபதி.