இதன் தொடா்ச்சியாக, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் பிரதிநிதிகளாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் ஆா். தமிழ்வேந்தன், வனமரபியல் மற்றும் மர இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானி வி. சிவகுமாா் ஆகியோரும், மனுதாரரின் பிரதிநிதிகளாக மத்திய பிரதேசத்தைச் சோ்ந்த செயற்பாட்டாளா் ரோஹினி சதுா்வேதி, அரிமளம் பசுமை மீட்புக் குழுவைச் சோ்ந்த எம். குமாா் ஆகியோரும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி- மெட்ராஸ்) பிரதிநிதிகளாக பேராசிரியா் பாலாஜி நரசிம்மன், பேராசிரியா் எல். இளங்கோ ஆகியோரும் என மொத்தம் 6 பேரும் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனா்.