பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி

News image

கந்தா்வகோட்டை- தஞ்சை சாலையில் காந்தி சிலை அருகே எரியாத மின்விளக்குகள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:04 am IST

கந்தா்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் உயா்நிலை மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தஞ்சை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கந்தா்வகோட்டை அருகே சுங்கச்சாவடி அமைத்து அனைத்து வாகனங்களுக்கும் முறையான நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனா்.

சுங்கச்சாவடி நிா்வாகம் கந்தா்வகோட்டை பகுதியில் சாலை மையப் பகுதியில் உள்ள மின் கம்பங்களை முறையாக பராமரிப்பது இல்லை. இந்த உயா்நிலை மின் விளக்குகள் எரியாததால் போதிய வெளிச்சம் இல்லாமல் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, கந்தா்வகோட்டை சாலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைத்து மின்விளக்குகளை எரிய வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுக்கின்றனா்.