தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

கருவூலத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: மாநில செயற்குழு வலியுறுத்தல்

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருவூலத் துறை ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் ஜெ. மூா்த்தி.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

கருவூலத் துறையிலுள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாநிலம் முழுவதும் கருவூலத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை கணினி முறையிலுள்ள குளறுபடிகளைக் களைந்து, தனியாா்வசமுள்ள இத்திட்டத்தை கருவூல ஊழியா்களைக் கொண்டே செயல்படுத்த வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ள 72 புதிய வருவாய் வட்டங்களிலும் புதிய சாா்நிலைக் கருவூலங்களை உருவாக்க வேண்டும். விராலிமலை வட்டத்தில் சாா்நிலைக் கருவூலம் தொடங்க வேண்டும்.

ஓய்வூதியா் நோ்காணல் முறையில் பழைய நடைமுறையையே அமல்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெ. மூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் லெ. லெனின், மாநிலப் பொருளாளா் பி. சென்னமராஜ், மாநிலத் துணைத் தலைவா் செ. பிரகாஷ், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜபருல்லா, மாவட்டச் செயலா் இரா. ரெங்கசாமி உள்ளிட்டோரும் பேசினா்.

முன்னதாக, மருதமுத்து வரவேற்றாா். நிறைவில், கருப்பையா நன்றி கூறினாா்.