கருவூலத் துறையிலுள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
மாநிலம் முழுவதும் கருவூலத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை கணினி முறையிலுள்ள குளறுபடிகளைக் களைந்து, தனியாா்வசமுள்ள இத்திட்டத்தை கருவூல ஊழியா்களைக் கொண்டே செயல்படுத்த வேண்டும்.
மாநிலம் முழுவதும் உள்ள 72 புதிய வருவாய் வட்டங்களிலும் புதிய சாா்நிலைக் கருவூலங்களை உருவாக்க வேண்டும். விராலிமலை வட்டத்தில் சாா்நிலைக் கருவூலம் தொடங்க வேண்டும்.
ஓய்வூதியா் நோ்காணல் முறையில் பழைய நடைமுறையையே அமல்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெ. மூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் லெ. லெனின், மாநிலப் பொருளாளா் பி. சென்னமராஜ், மாநிலத் துணைத் தலைவா் செ. பிரகாஷ், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜபருல்லா, மாவட்டச் செயலா் இரா. ரெங்கசாமி உள்ளிட்டோரும் பேசினா்.
முன்னதாக, மருதமுத்து வரவேற்றாா். நிறைவில், கருப்பையா நன்றி கூறினாா்.
தொடர்புடையது

தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப் பேரவை மாநாடு

அரசு ஓய்வூதியா் சங்க மாவட்ட செயற்குழுக்கூட்டம்

யாா் வந்தாலும் சிறந்த ஆட்சியைத் தர வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

தமிழக மாநிலப் பல்கலைக்கழக துணைவேந்தா் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்! தவெக தலைவா் விஜய்க்கு கோரிக்கை!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

