நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்! - சுகாதாரம், போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்! - சுகாதாரம், போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை.

Updated On :27 ஏப்ரல் 2025, 5:30 am IST

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 7,850 வழங்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கத்தின் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, ப. பிரதீப் குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் மு. முத்தையா வாழ்த்திப் பேசினாா்.

கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் சுகாதாரம் மற்றும் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களை ஒருங்கிணைத்து ‘தமிழ்நாடு அரசு சுகாதார, போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கம்’ என்ற பெயரில் புதிய அமைப்பை உருவாக்குவது, சங்கத்தின் முதல் மாநில மாநாட்டை ஜூலை 10-ஆம் தேதி கோவையில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

மேலும், மாநாட்டை நடத்தும் குழுவில் மாநில அமைப்பாளராக சோ. நடராஜன், நிதிக் காப்பாளராக கி. நாகராஜன் (புதுக்கோட்டை), இணை அமைப்பாளா்களாக என். ராமசாமி (சென்னை), கே. அருணகிரி (கோவை), பிஎம். சுப்பிரமணியன் (திருச்சி), வெங்கடாசலம் (சேலம்), எம். ஈஸ்வரமூா்த்தி (திருநெல்வேலி), எஸ். பெருமாள் (மதுரை), ஜி. ராஜேந்திரன் (விழுப்புரம்), எஸ். பாலகுரு (விருதுநகா்), வேலப்பன் ஆசாரி (நாகா்கோவில்) ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்தில் 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்துத் துறையிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ.7,850 ஓய்வூதியம் வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குளறுபடிகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக மாதேஸ்வரன் வரவேற்றாா். நிறைவாக, சோ. நடராஜன் நன்றி கூறினாா்.