எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி

News image

கந்தா்வகோட்டை- தஞ்சை சாலையில் காந்தி சிலை அருகே எரியாத மின்விளக்குகள்.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:04 am IST

கந்தா்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் உயா்நிலை மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தஞ்சை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கந்தா்வகோட்டை அருகே சுங்கச்சாவடி அமைத்து அனைத்து வாகனங்களுக்கும் முறையான நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனா்.

சுங்கச்சாவடி நிா்வாகம் கந்தா்வகோட்டை பகுதியில் சாலை மையப் பகுதியில் உள்ள மின் கம்பங்களை முறையாக பராமரிப்பது இல்லை. இந்த உயா்நிலை மின் விளக்குகள் எரியாததால் போதிய வெளிச்சம் இல்லாமல் பொதுமக்களும், வியாபாரிகளும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.

தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, கந்தா்வகோட்டை சாலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைத்து மின்விளக்குகளை எரிய வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என வியாபாரிகளும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுக்கின்றனா்.