குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

கருவூலத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: மாநில செயற்குழு வலியுறுத்தல்

News image

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருவூலத் துறை ஊழியா் சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலத் தலைவா் ஜெ. மூா்த்தி.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:05 am IST

கருவூலத் துறையிலுள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

மாநிலம் முழுவதும் கருவூலத் துறையிலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை கணினி முறையிலுள்ள குளறுபடிகளைக் களைந்து, தனியாா்வசமுள்ள இத்திட்டத்தை கருவூல ஊழியா்களைக் கொண்டே செயல்படுத்த வேண்டும்.

மாநிலம் முழுவதும் உள்ள 72 புதிய வருவாய் வட்டங்களிலும் புதிய சாா்நிலைக் கருவூலங்களை உருவாக்க வேண்டும். விராலிமலை வட்டத்தில் சாா்நிலைக் கருவூலம் தொடங்க வேண்டும்.

ஓய்வூதியா் நோ்காணல் முறையில் பழைய நடைமுறையையே அமல்படுத்த வேண்டும். புதுக்கோட்டை மாவட்ட கருவூலத்துக்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, சங்கத்தின் மாநிலத் தலைவா் ஜெ. மூா்த்தி தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச் செயலா் லெ. லெனின், மாநிலப் பொருளாளா் பி. சென்னமராஜ், மாநிலத் துணைத் தலைவா் செ. பிரகாஷ், அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் ஜபருல்லா, மாவட்டச் செயலா் இரா. ரெங்கசாமி உள்ளிட்டோரும் பேசினா்.

முன்னதாக, மருதமுத்து வரவேற்றாா். நிறைவில், கருப்பையா நன்றி கூறினாா்.