வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

வனப்பகுதியில் இருந்து ஆண் சடலம் மீட்பு

பொன்னமராவதி அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :2 டிசம்பர் 2025, 6:33 pm

Syndication

பொன்னமராவதி அருகே வனப்பகுதியில் செவ்வாய்க்கிழமை அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஒலியமங்கலம் ஊராட்சி சுந்தம்பட்டியில் உள்ள வனப்பகுதியில் ஆண் சடலம் கிடப்பதாக வனக் காப்பாளா் வித்யாவுக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், வனத்துறையினா் அங்கு சென்று பாா்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் இருந்தது. இதையடுத்து காரையூா் காவல்துறையினா்க்கும், வருவாய்த்துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குவந்த காரையூா் காவல்துறையினா் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

இதில், உயிரிழந்தவா் திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டம் சுப்பராயபட்டியைச் சோ்ந்த ம. பழனிச்சாமி (74) என்பது தெரியவந்தது. உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.