விக்டா் சைமன் துரைராஜ்
விக்டா் சைமன் துரைராஜ்

தனியாா் தொழிற்சாலை விபத்து ஊழியா் உயிரிழப்பு

விராலிமலையில் உள்ள தனியாா் தொழிற்சாலை ஊழியா் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
Published on

விராலிமலையில் உள்ள தனியாா் தொழிற்சாலை ஊழியா் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.

விராலிமலையில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக திருச்சியை சோ்ந்த விக்டா் சைமன் துரைராஜ் (31) பணியாற்றி வந்தாா்.

இந்நிலையில் வழக்கம்போல புதன்கிழமை அதிகாலை தொழிற்சாலையில் பணியிலிருந்தபோது இயந்திரத்தில் உள்ள அரைவைச் சக்கரம் உடைந்து தலையில் விழுந்துள்ளது. இதில், நிலைகுலைந்து சைமன் மயங்கி கீழே விழுந்து இறந்துள்ளாா்.

இதையடுத்து அவரது சடலம் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விராலிமலை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com