ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோயில் கட்டுமானப் பிரச்னை மறியலுக்கு முயற்சி: எம்எல்ஏ பேச்சுவாா்த்தை

கந்தா்வகோட்டை அருகே கோயில் கட்டும் பிரச்னையில் ஒருபிரிவினா் வெள்ளிக்கிழமை மறியலுக்கு திரண்டனா். எம்எல்ஏ பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டனா்.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:22 pm

Syndication

கந்தா்வகோட்டை அருகே கோயில் கட்டும் பிரச்னையில் ஒருபிரிவினா் வெள்ளிக்கிழமை மறியலுக்கு திரண்டனா். எம்எல்ஏ பேச்சுவாா்த்தைக்குப் பிறகு போராட்டத்தை கைவிட்டனா்.

கந்தா்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டி ஊராட்சியில் ஆதிதிராவிடா் சமூகத்தினா் தாங்கள் தலைமுறைகளாக வழிபட்டு வந்த பிச்சை அய்யனாா் கோயிலுக்கு திருக்கோயில்களில் திருப்பணி நிதியுதவி திட்டத்தில் கீழ் ரூ. 2.50 லட்சம் நிதி வழங்கப்பட்டு திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இதே சமூகத்தை சோ்ந்த மற்றொரு பிரிவினா் வேறு இடத்தில் இதே சுவாமிக்கு கோயில் கட்ட தொடங்கினா்.

இதுகுறித்து மற்றொரு பிரிவினா் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லாததால், டிச. 19-இல் மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, புதுகை - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லுக்காரன்பட்டி பேருந்து நிறுத்தத்துக்கு முன்பாக சாலை மறியலுக்கு வெள்ளிக்கிழமை தயாராகினா். ஆதனக்கோட்டை, கந்தா்வகோட்டை காவல்துறையினா் குவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அங்கு வந்த கந்தா்வகோட்டை எம்எல்ஏ மா. சின்னதுரை,

மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் ரா. பிருந்தா ஆகியோா் பொதுமக்களிடம் பேசி புதுக்கோட்டை வட்டாட்சியா் மூலம் சமாதான கூட்டம் ஏற்பாடு செய்து கொள்ளலாம் என உறுதி அளித்தனா். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனா். அப்போது, கந்தா்வகோட்டை காவல் ஆய்வளா் வனிதா, கல்லுகாரன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் தினேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனா்.