ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்க வலியுறுத்தல்

புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்

News image
Updated On :20 டிசம்பர் 2025, 7:37 pm

Syndication

புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

ஆவுடையாா்கோவில் ஒன்றியம் விளானூா் ஊராட்சி வெளியாத்தூா் கிராமத்தில் கடந்த 5 ஆண்டுகளாக அரசு வழங்கிய தொகுப்பு வீடுகள் பாதி கட்டிய நிலையில் கிடப்பில் போடப்பட்டதை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.

மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப் பொருள்கள் விற்பவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். புதுக்கோட்டை திருவப்பூா் ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய அரசுத் துறை அலுவலங்களில், தமிழக இளைஞா்களின் வேலையைப் பறித்துள்ள மத்திய அரசைக் கண்டித்து வரும் ஜன. 5-ஆம் தேதி புதுக்கோட்டை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, என். முத்துலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் மாரிமுத்து, மாவட்டப் பொறுப்பாளா் மா. திலகா், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் இரா. ராதாகிருஷ்ணன், மாவட்டத் துணைச் செயலா்கள் பாலசுப்பிரமணியன், ஜான்போஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.